தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது; சென்னையில் 2,124 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 33 ஆயிரத்து 434 (9,33,434) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,33,434 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,314 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,78,571 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 08; தனியார் மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 2124 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 265126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,05,20,126 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88,538 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 41,955 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,63,478 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,992 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,69,920 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,626 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 261 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 192.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* பங்களாதேஷ் -2

* மேற்கு வங்கம்-9

* ஜார்கண்ட்-2

* கர்நாடகா-5

*ஆந்திர பிரதேசம் -5

* பீகார் -3

*கர்நாடகா - 2

* அசாம் -1

* குஜராத் - 1

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இங்கிலாந்து - 4

*ஓமன் - 1

Related Stories: