திருவனந்தபுரம்: கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோயும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் இந்த நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாயினர். கேரள அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஷிகெல்லா பாதித்து கடந்த மாதம் 15ம் தேதி 55 வயதான முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.