ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் பொது கழிவறை வசதியில்லாததால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சுங்குவார்சத்திரம் பகுதியை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்றால் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் வந்துதான் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிலையத்தில் நிழற்குடை, பொது கழிவறை இல்லாததால் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.