ரயிலில் முன்பதிவு செய்ய ஏடிஎம் கார்டு அவசியம்: கறார் உத்தரவால் பயணிகள் தவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்ய செல்பவர்கள் இனி கட்டாயம் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கடைபிடிக்க சொல்லும் வேலையில், ரயில்வே ஸ்டேஷன்களிலும் இதை அமல்படுத்தி உள்ளது.

தற்போது ரயில்களில் பொது பெட்டிகள் இல்லை. அதனால் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. அதனால் டிக்கெட் எடுக்கும் கவுண்டர்களில் எந்த பிரச்னை ஏற்படவில்லை. ரயில்களில் உள்ள அனைத்து வகை வகுப்புகள் முன்பதிவு செய்யும் போது கட்டாயம் ஏடிஎம் கார்டுகளை வைத்து தான் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதனால் நேரிடையாக பணம் கொடுப்பதை ரயில்வே நிர்வாகம் குறைத்து வருகிறது. படிப்படியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகிறது. ஆனால் ஏடிஎம் கார்டு இல்லாத மக்களிடம் தற்போது பணம் பெற்று வருகின்றனர். இதை முழுமையாக தொடர முடியாது என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் பயணிகள் கொதிப்படைந்துள்ளனர். சாதாரண கூலி வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள், பழவியாபாரிகள் 24 மணி நேரமும் ஏடிஎம் கார்டுகளை வைத்திருக்க முடியாது என அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: