தருமபுரி: தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் வீடு புகுந்து 41 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி, 11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் திருடியுள்ளது. மொரப்பூரில் எல்.ஐ.சி. ஓய்வு பெற்ற அலுவலர் கண்ணன் வீட்டில் கதவு, பூட்டை உடைத்து கும்பல் நகை, பணத்தை திருடியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.