×

அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏ உட்பட 6 பேர் நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும் கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேந்ந்த 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

அதிமுக எம்எல்ஏவும், அதிமுக மகளிர் அணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம், பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்ட்டின் லூயிஸ் என்ற பாபு, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராம்குமார் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : AIADMK , OPS, EPS
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...