ஜகார்தா: இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவில் நேற்று சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பம், ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனால், பாலி உள்ளிட்ட இடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.