பெரம்பூர்: சென்னை திருவிக நகர் கே.சி.கார்டன் 4வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (30). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த இமான் (எ) ஜெயக்குமார் (27). இவர்கள் இருவருக்கும் கடந்த 8ம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயக்குமார் தனது நண்பர்களை அழைத்து வந்து ஆனந்தை அவரது வீட்டில் வைத்து சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். மேலும் இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில், போலீசார் விசாரணைக்காக ஜெயக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால், அவர் காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவானார்.