சென்னை: காஞ்சிபுரம் நகராட்சி திருக்காலிமேடு, பல்லவன் நகர், மின் நகர், ஒலிமுகமதுபேட்டை, பல்லவர்மேடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நாளுக்குநாள் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள், வாகனங்கள் வரும் போது, சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், வாகனங்களில் செல்வோரை, நாய்கள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவதும், பள்ளத்தில் விழுந்து படுகாயமடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதுபோன்ற தெருநாய்களின் தொல்லையால் குழந்தைகள் ரோட்டில் விளையாட முடியாமலும், மக்கள் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றுகின்றன. எனவே, நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த கோரி, பொதுமக்கள் பலர் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் எடுத்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.