வாஷிங்டன்: டெக்சாஸ் மாகாணத்தில் பிரைன் என்ற இடத்தில் தொழில் வளாகம் ஒன்றில் மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். மர்மநபரை காவலர் விரட்டி சென்ற போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார். இறுதியாக கொலையாளியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து டெக்சாஸ் மாகாண போலீஸ் அதிகாரி கிராய்க் தெரிவித்ததாவது, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம். இந்த விசாரணையில் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். இதனிடையே தெற்கு கரோலினா மாகாணத்தில் ராக் என்ற இடத்தில் நேற்று முன்தினம் கால்பந்து விளையாட்டு வீரர் பிலிப் ஆதம்ஸ் ஆவேசமடைந்த துப்பாக்கியால் சுட்டதில் மருத்துவர், அவரது மனைவி, பேரக்குழந்தைகள் இருவர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.