×

இதெல்லாம் தெரியுமா?

*மின்சாரத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்ளின், பள்ளி மாணவராக இருந்தபோது எப்போதும் கணக்கில் பூச்சியம்தான் வாங்கியிருக்கிறார்.
*தன் கொடூர ஆட்சியால் உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி உகாண்டாவின் இடிஅமீன். இவர் இருபது வயது ராணுவ வீரனுக்கும், நாற்பது வயது சமையல்காரம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர்.
*அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் எதுவரை படித்திருக்கிறார் தெரியுமா? ஐந்தாவது வகுப்புதான்.
*இரண்டாம் உலகப்போரின் வில்லனான ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர், தன் தாயாருக்கு நான்காவது மகன். அவருடைய தாயார் கிளாராவின் இரண்டாவது கணவருக்குப் பிறந்தவர்.
*ஈராக்கின் சர்வாதிகாரியாக அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய சதாம் உசேன், தன்னுடைய வளர்ப்புத் தந்தையின் கொடுமை தாங்காமல் பத்து வயதிலேயே வீட்டை விட்டு ஓடியவர்.
*இத்தாலியின் சர்வாதிகாரியாக உயர்ந்த முசோலினி, இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரோடு கூட்டணி அமைத்து உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினார். அவருடைய தாயார் மென்மையான குணம் கொண்ட பள்ளி ஆசிரியை. அவருடைய அப்பா இரும்புப் பட்டறையில் பணியாற்றிய தினக்கூலி தொழிலாளி.



Tags : இடிஅமீன்
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்