வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி... கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் ட்வீட்!!

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் இந்த ஊசியை போட்டுக்கொண்டார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,#CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.

குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.

எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: