தூத்துக்குடி கனரா வங்கியில் மகளிர் தின விழா

தூத்துக்குடி : தூத்துக்குடி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் மகளிர் தினவிழா நடந்தது. விழாவினை முன்னிட்டு, சிறுகுறு பெண் தொழில்அதிபர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி, இலவச நீரிழிவு முகாம் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குதல், பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

விழாவிற்கு, தூத்துக்குடி மண்டல உதவி பொதுமேலாளர் ஸீனாதேவ் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் ரபீந்திரன் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். விழாவில்,  தொழிலதிபர் பிஎஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, எக்ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் வெயிலாராஜா, பேராசிரியை பாத்திமாபாபு, ஒமேகா கருத்தரிப்பு மைய இயக்குநர் டாக்டர்.அர்ச்சனாஅம்புஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மகளிர் தினம் குறித்து எடுத்துரைத்தனர்.

 இதில், கனரா வங்கி கிளை மேலாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டல மேலாளர்கள் சிதம்பரசெல்வி, சுஜாதா, சிந்துவேலா மற்றும் மண்டல அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: