டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரதமர் பொதுவானவர் என்பதால் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.