×

தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் பழனிசாமிக்கு டெபாசிட்டே கிடைக்காது : தேமுதிக 'முக்கிய புள்ளி’ பரபரப்பு பேச்சு

சேலம் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் பொருளாளர் இளங்கோவன், “அதிமுக தேமுதிகவை மதிக்கவில்லை. இதனால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து நின்றாலும் தேமுதிக வெற்றிபெறும். நாம் கெஞ்சிக் கொண்டிருக்க அவசியமில்லை. எடப்பாடி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் பழனிசாமியில் டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று ஆவேசமாகப் பேசினார்

இதனிடையே அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடனான தொகுதி பங்கீடு குறித்து 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Palanisamy ,Temujin ,Demuthika , தேமுதிக
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...