சென்னை: குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சியால் தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.