×

மோடி ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது : சிலிண்டர் விலையை மேற்கோள் காட்டி ப.சிதம்பரம் கிண்டல்!!

சென்னை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்தது.

இதற்கிடையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் விலை கடைசியாக கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810-க்கு விற்கப்பட்டது.இந்நிலையில் மார்ச் 1ம் தேதி சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.835க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.பிப்ரவரி மாதத்தில் 3 முறை உயர்வு தந்த அதிர்ச்சியிலிருந்து விலகாத பொதுமக்கள் சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2014ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்ற போது LPG சிலிண்டரின் விலை ரூ 410. இன்று விலை ரூ 820. திரு மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது!, என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


Tags : India ,Modi ,P. Chidambaram , ஆட்சி
× RELATED “நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு...