கொல்கத்தா கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு: மோடி, மத்திய அமைச்சர் இரங்கல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 2 ரயில்வே அதிகாரிகள், ஒரு காவல் அதிகாரி உள்பட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 8 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர்.

அந்த கட்டிடத்தின் 13-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாதிப்பு குறித்து நேரில் பார்வையிட்டார். இந்த தீ விபத்து சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது என கூறினார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என கூறினார். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் மாநில அரசுக்கு அனைத்து சாத்தியப்பட்ட உதவிகளும் வழங்கப்படும் எனவும், ரெயில்வே துறையின் 4 முக்கிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களை கொண்டு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயெல் கூறினார்.

Related Stories: