நெய்வேலி: நெய்வேலி வட்டம் 13ல் உள்ள என்எல்சி குடியிருப்பில் வசித்தவர் முருகேசன் (50). இவர் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகில் உள்ள ஷெட்டின் மேற்கூரையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பேண்ட் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் ‘முருகேசன் ஆகிய நான் எழுதியது, கந்துவட்டி கோரப்பிடியில் நான் ஒன்பது பேரிடம் பணம் வாங்கி உள்ளேன்’ என எழுதி இருந்தது. இதுகுறித்து முருகேசன் மனைவி இந்திராணி புகாரின்படி நெய்வேலி ெதர்மல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முருகேசன் மகளுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கந்து வட்டி கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என்எல்சி தொழிலாளர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.