சென்னை: பெண்கள் தங்களின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறினார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனைகள் சார்பில், விழிப்புணர்வு வாகன பிரசாரம் நேற்று துவங்கப்பட்டது. இதனை அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, துணை தலைவர் பிரீதா ரெட்டி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி பேசுகையில், ‘‘சர்வதேச பெண்கள் தினம் இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சுகாதார நிபுணர்கள், இன்னும் பத்தாண்டுகளில், தொற்றா நோய்களில் 80 சதவீதம் பேர் உயிரிழக்க கூடும் என கணித்துள்ளனர்.