ரயில் மோதி மாணவன் பலி

ஆவடி: பட்டாபிராம் பாலாஜி நகர் முதல் தெரு சேர்ந்தவர் விக்னேஷ்(21). அதே பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு பொருளாதாரம் படித்து வந்தார். நேற்று மாலை நண்பரை பார்க்க வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர் மீது மோதியது. இதில், ரயிலில் அடிப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: