வாக்காளர் விழிப்புணர்வு

பள்ளிப்பட்டு: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை சார்பில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதி முறையாக கடைபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நேற்று நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவியர் கலந்துகொண்டு கைகளில் பாதாகைகள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பேரூராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: