உலக மகளிர் தினவிழா

திருத்தணி: திருத்தணி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். முன்னதாக தமிழ்துறை உதவி பேராசிரியர் நிர்மலா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் ஏகாதேவசேனா, வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் முதல்வர் விஜயலட்சுமி பேசுகையில், “மாணவிகள் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாணவிகள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். தங்களது லட்சியங்களை அடைய திட்டமிடல் மிகவும் முக்கியமானது. பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்” இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: