தேர்தல் பறக்கும் படைக்கு பயிற்சி

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சார்ந்தவர்களுக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் வாயிலாக பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமை தாங்கினார். இந்த பயிற்சி முகாமில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சார்ந்தவர்களுக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்(கணக்கு) விஸ்வநாதன், நேர்முக உதவியாளர்(பொது) வித்தியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: