×

ரூ.5 கோடி மோசடி - நிதி நிறுவன நிர்வாகிகள் மீது தாக்குதல்

சிவகங்கை: திருப்பத்தூரில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக கூறி தனியார் நிதி நிறுவன நிர்வாகிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருப்பத்தூர் சின்ன குளம் அருகே சீரங்கப்பட்டியை சேர்ந்த 7 பேர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிதி நிறுவனத்தில் கட்டி வந்தனர். செலுத்திய பணம் 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என ஆசை வார்த்தைகளை கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : Fraud
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை