×

ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெறாததால் ரெப்கோவை வங்கியாகவே கருத முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெறாததால் ரெப்கோவை வங்கியாகவே கருத முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடன் செலுத்தாததால் ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னையை சேர்ந்த கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுதாரருக்கு ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரெப்கோ, ரிசர்வ் வங்கியின் உரிமம் பெறாமல் வங்கியை போல் செயல்படுவது சட்ட விரோதம் என மனுதாரர் தெரிவித்துள்ளார். உரிமம் பெற ரெப்கோ கொடுத்த மனு மீது ரிசர்வ் வங்கி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று மனுதாரர் தகவல் அளித்துள்ளார்.

Tags : Refco ,Supreme Court , Repco
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...