தூத்துக்குடி: சாலையை காணவில்லை மக்கள் புகார்

தூத்துக்குடி: குலசேகரநல்லூர் கிராமத்தில் இருந்த சாலையை காணவில்லை எனக்கூறி ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. வீரப்பாண்டிய கட்டபொம்மன் காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்த மங்கம்மா சாலையை தனிநபர்கள் ஆக்கிரமித்ததாக புகார் கூறியுள்ளனர். சாலை ஆக்கிரமிக்கப்பட்டதால் நெல் அறுவடை மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். மக்கள் பயன்பாட்டுக்கு சாலையை மீட்டுத் தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: