சென்னை: சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு இடம் அளிப்பது குறித்து மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அரசியல், நிர்வாகம், சட்டமன்றம் என அனைத்திலும் பாலின சமத்துவம் இல்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.