தூத்துக்குடி: பாலியல் வழக்கில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி.யை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் நடத்துகின்றனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிக்கிய டி.ஜி.பி.க்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டனர். மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.