டெல்லி : இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சக குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நம் நாட்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளை அமைத்து வருகின்றனர். பாலின நீதியை மேம்படுத்துவதற்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை அகற்றுவதற்கும் கூட்டாக தீர்மானிப்போம்.பிரதமர் நரேந்திர மோடி:நம் பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்கள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்.ராகுல் காந்தி வரலாற்று சாதனைகளை படைக்கும் திறமை பெற்றவர்கள் பெண்கள். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர்கள் பெண்கள். பெண்கள் சாதனைகள் படைப்பதை எந்த சக்தியும் தடுத்து நிறுத்த அனுமதித்துவிடக் கூடாது.