மும்பை: உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 % உயர்ந்ததன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 50,732 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியுள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 80 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 15,020ல் வர்த்தகம் தொடங்கியுள்ளது.