பாளையங்கோட்டையில் காந்தி மண்டபம் சுவர் மீது திடீரென `காவி வர்ணம்’ பூச்சு

நெல்லை: பாளையில்  உள்ள காந்தி மண்டப சுவர் மீது காவி சாயம் பூசப்பட்டது. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டை  கோட்டூர் சாலையில்  வாய்க்காலம் பாலம் அருகில் காந்தி மண்டபம் உள்ளது. அங்கு காந்தி, இந்திரா,  பாரதியார், கிருஷ்ணர் சிலைகள் உள்ளன. இந்த மண்டப  சுற்றுச்சுவர் மீது காங்கிரஸ் கட்சியின்  கொடி  வர்ணம் தீட்டப்பட்டு   இருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறை  அமல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், இதை  மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் மீது காவி சாயம் பூசியுள்ளனர். இதற்கு  அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், காவி வர்ணத்தை அகற்ற  வலியுறுத்தியும் காந்தி மண்டபம் முன் நேற்று காலை திரண்டு முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல்  அறிந்து பாளை உதவி கமிஷனர் ஜான்பிரிட்டோ வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் மாநகராட்சி ஊழியர்கள்  காவி வர்ணத்தை சுண்ணாம்பு அடித்து மறைத்தனர். அதன்பின்  பொதுமக்கள், கலைந்து சென்றனர்.

Related Stories: