அம்பத்தூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர செயலாளர் சந்தானம் தலைமையில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என முதல்வர் விளம்பரம் செய்கிறார். எங்கே வெற்றி நடைபோடுகிறது என நான் கூகுளில் தேடி பார்த்தேன், எத்தியோப்பியா நாடு வரை போய் நிற்கிறது. அந்த நாடு எவ்வளவு கேவலமாக இருக்கிறதோ, அதை விட கேவலமாக தமிழகம் உள்ளது. இதிலிருந்து தமிழகம் மீள வேண்டும். பழமை, பெருமையை பேசிக்கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. அதனை நிகழ்த்தி காட்ட வேண்டும். ரூ.2.5 லட்சம் கோடிக்கு முதலீடு வந்து உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.