மதுரைக்கு வந்திருந்த மத்திய இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ ஜெனரலுமான வி.கே.சிங், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நிகழ்ச்சியில் பாஜ சார்பிலான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர் சிலருடன், பொதுமக்களே அதிகமிருந்தனர். தமிழில் ‘வணக்கம்’ என்றவர், இந்தியில் சகட்டுமேனிக்கு பேசிக் கொண்டே போனார். ராணுவ வீரர்கள் குடும்பத்தினரும், பொதுமக்களும் இந்தி புரியாமல் ‘என்னப்பா இவர்... நம்மளை திட்டுறாரா? பாராட்டி பேசுறாரா’ என ஒன்றுமே புரியாமல் மண்டை காய்ந்தனர்.