சென்னை: சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 1வது தெருவில் உள்ள பெட்ரம் ஸ்வாரிஸ் (53) என்பவரின் துணி துணியில், கடந்த ஜனவரி 4ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு தீவித்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த ஏராளமான துணிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெட்ரம் ஸ்வாரிஸ் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் சாகுல் அமீது மகன் நிஜாம் மீது சந்தேகம் உள்ளது, என்று தெரிவித்து இருந்தார். முதற்கட்ட விசாரணையில், கடை வாடகை தொடர்பாக பெட்ரம் ஸ்வாரிஸ் மற்றும் நிஜாம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இங்கு ஓட்டல் வைக்க உள்ளதால், கடையை காலி செய்யும்படி நிஜாம் கூறியுள்ளார். ஆனால், உடனே காலி செய்ய முடியாது, என பெட்ரம் ஸ்வாரிஸ் தெரிவித்துள்ளார்.