×

இறக்குடா பிளைட்ட... நடுவானில் இந்திய பயணி அலம்பல்

லண்டன்: கிழக்கு ஆப்ரிக்காவின் கானாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை டெல்லிக்குப் புறப்பட்டது ஏர் பிரான்ஸ் விமானம். பல்கேரியா மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள சோபியா விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை இறக்கச் சொல்லி தகராறு செய்தார் இந்தியப் பயணி ஒருவர். இந்த குழப்பத்தால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. பின்பு விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். சுமார் 72 மணி நேரம் அவரை காவலில் வைத்திருந்த பல்கேரிய அரசு, உடனே இந்திய தூதரகத்துக்கும் தகவல் கொடுத்தது. அந்த நபரின் மூர்க்கத்தனமான நடவடிக்கைக்காக 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று பல்கேரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Indian passenger alambal in the middle of Irakuta flight
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்