×

குறைகளை கேட்காத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: ‘‘குறைகளை காது கொடுத்து கேட்காத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்,’’ என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள கோடவன்பூரில் நடந்த விழாவில் பங்கேற்று பேசியதாவது: பொதுமக்களின் குறைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என என்னிடம் நிறைய புகார் வருகின்றன. இதுபோன்ற சின்னப் பிரச்னைகளை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள். அதற்கு தான் எம்பி, எம்எல்ஏ, கலெக்டர், சப் கலெக்டர், பிடிஓ இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள். அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால், பிரச்னையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என் பலத்தைக் காட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Union Minister , Beat officials who do not listen to grievances with a bamboo stick: Union Minister controversial speech
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...