கஞ்சா கடத்திய 3 பேர் கைது

ஆவடி: ஆவடி சி.டி.எச். சாலை ஆஞ்சனேயர் கோயில் அருகில் ஆவடி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தபோது, பையில் 13 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். இதுதொடர்பாக, ஆவடி தேவி நகர் பாரதி தெருவை சேர்ந்த ராஜேஷ்(25), திருவிக தெருவை சேர்ந்த குமாரவேல்(27), இஎஸ்ஐ அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(46) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: