மும்பை: நக்சல்களுடன் தொடர்பு மற்றும் கலவர வழக்கில் கைதான கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், 2 ஆண்டுகளுக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி 1ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக நக்சல்பாரிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறி கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் (81), அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், நவி மும்பை, தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.