×

ஏப். 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி: மே 30-ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்.9-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. சென்னையில் முதல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.9-ம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் களம் இறங்கவுள்ளனர். தொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் 6 மைதானங்கள் ஐபிஎல் போட்டிகளை நடத்துகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகள் நடைபெறவுள்ளன என ஐபிஎல் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் உள்ள எந்த அணிக்கும் இம்முறை சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது என கூறியுள்ளது. தொடரின் முதற்கட்ட போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிற்பகுதியில் சூழலுக்கேற்ப முடிவு செய்யப்படும் என கூறியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை-டெல்லி மோதியது. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்.19-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் வீரர்கள் பல பேருக்கு அதிக விலைக்கு தேர்ந்தேடுக்கப்பட்டனர்.


Tags : IPL D20 Cricket Competition ,Chennai ,PCI , Apr. The IPL T20 starts on the 9th in Chennai
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து