திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு காணவில்லை என புகார்: மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைத்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் பசுக்களை தானமாக வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் பசுக்கள், கோயில் கோசாலையில் பராமரிக்கப்படும். அதன்படி, பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தாயின் நினைவாக ஓங்கோல் இன பசுவை தானமாக வழங்கினார். இந்நிலையில், தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு, கோசாலையில் தற்போது இல்லை என்ற தகவல் சம்பந்தப்பட்ட பெங்களூரு தொழிலதிபருக்கு தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று நேரில் வந்து முறையிட்டார். கோயிலுக்கு வழங்கிய பசுவை நேரில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், கோசாலையில் அந்த பசு இல்லை. அதனால் பரபரப்பு ஏற்பட்டது.