கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானது மேட்டுப்பாளையம் சட்டமன்ற ெதாகுதி. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இத்தொகுதி அமைந்துள்ளது. கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை இத்தொகுதியில்தான் உள்ளது. 2005ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம், பாரம்பரிய சின்னமாக அறிவித்த நீலகிரி மலை ரயில், இங்கிருந்துதான் நீலகிரிக்கு பயணிக்கிறது. விவசாயத்துக்கு பக்க பலமாக இருக்கும் பவானி ஆறு இத்தொகுதியில்தான் ஓடுகிறது. பரளிக்காடு சுற்றுலா தலம், கல்லாறு பழப்பண்ைண ஆகியவையும் இத்தொகுதியில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற வனப்பத்ரகாளியம்மன் கோயில், காரமடை அரங்கநாதர் கோயில் ஆகியவையும் இத்தொகுதியில் உள்ளன. இத்தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி என்னும் இடத்தில்தான் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான முகாம் தற்போது நடந்து வருகிறது.
இத்தொகுதியில், ஒக்லிக கவுடர், வெள்ளாள கவுண்டர், நாடார், பட்டு நெசவாளர், முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இத்தொகுதியில், மேட்டுப்பாைளயம் நகராட்சி மற்றும் சிறுமுகை பேரூராட்சி, காரமடை பேரூராட்சி, எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, கூடலூர் பேரூராட்சி என 4 பேரூராட்சிகள் உள்ளன. தவிர, 18 ஊராட்சிகளும் உள்ளன. இத்தொகுதியில், ஆண்கள் 1,43,198 பேர், பெண்கள் 1,52,566 பேர், மூன்றாம் பாலினத்தினர் 38 பேர் என மொத்தம் 2,95,802 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1852ம் ஆண்டு முதல் இத்தொகுதியில் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில், 8 முறை அ.தி.மு.க., 2 முறை தி.மு.க., 4 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒருமுறை சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.கே.சின்னராஜ் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.