லடாக்: லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. சில நிமிடங்கள் உணரப்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் ஒடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் சில பகுதிகளில் மீட்பு பணிகளை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பலேசா பகுதியினை மையமாகக் கொண்டு அதிகாலை 04.40 மணியளவில் நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவாகியிள்ளது குறிப்பிடத்தக்கது. லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.