டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் என்பவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அரசியல் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.