இந்தியா பெற்றோரை பிரிய மனமின்றி அழுத மணப்பெண் பலி Mar 07, 2021 புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், சோனேபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் குப்தேஸ்வரி. அவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் கணவருடன் செல்லும் முன்பாக, பெற்றோரை விட்டுப் பிரிய மனமின்றி குப்தேஸ்வரி தேம்பித் தேம்பி அழுதார். அவரை தேற்ற முடியாமல் பெற்றோரும் சேர்ந்து அழுதனர். தாங்க முடியாத அளவுக்கு குப்தேஸ்வரி தேம்பி அழுததால், அவருக்கு அங்கேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பெற்றோரும், உறவினர்களும் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதும், இரு வீட்டினரும் சோகத்தில் கதறி அழுதனர். திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மணப்பெண் இறந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்
மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்