புதுடெல்லி: கொரோனா வைரஸ் அதிகரிக்கும் 8 மாநிலங்களில் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுதலை விரைவுபடுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி பாதிப்புகள் அதிகரிக்கும் 8 மாநிலங்களின் கள நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஆலோசனை மேற்கொண்டது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் அரியானா, ஆந்திரா, ஒடிசா, கோவா, இமாச்சங், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண் இயக்குநர்களுடன் பங்கேற்றனர்.