அய்சால்: மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் சூகியின் ஆட்சியை புரட்சியின் மூலம் கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. இதை ஏற்காத மக்கள், ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ராணுவம் ஆட்சிக்கு பயந்து, மியான்மரில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்குள் எல்லை வழியாக தப்பி வருகின்றனர். சமீபத்தில், மியான்மர் காவல் துறையை சேர்ந்த 30 அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வடகிழக்கு மாநிலமான மிசோராமுக்கு வந்து தங்கியுள்ளனர். இது பற்றி ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது
.