போக்சோவில் வாலிபர் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (32). இவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கை, மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 4ம் தேதி இவரது மனைவி மற்றும் மாமியார் வெளியே சென்று இருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த 19 வயதான தனது மைத்துனியை, கத்தி முனையில் மிரட்டி லோகேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய தனது அம்மா, அக்காவிடம் இதுபற்றி கூறி அந்த பெண் அழுதாள். அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுபற்றி நேற்று முன்தினம் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, லோகேஸ்வரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: