கூடுதல் நேரம் திறந்து விற்பனை மதுபான கடை மேலாளர் உட்பட 2 பேர் கைது

சென்னை: சென்னையில் அரசால் அனுமதித்த நேரத்திற்கும் மேலாக கடையை திறந்து, மது விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து, மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர்  தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு தனியார் மதுபான கடை ஒன்று அரசால் அனுமதித்த நேரத்திற்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் அரசு அனுமதித்த நேரத்திற்கு மேலாக மதுபான கடையை திறந்து வைத்திருந்த கடையின் மேலாளர் தரமணி, அவ்வையார் ெதருவை சேர்ந்த திருப்பதியப்பா (41), மேற்கு மாம்பலம், அப்பாசாமி தெருவை சேர்ந்த அர்ஜீன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Related Stories: