மாமூல் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.எம்.நகர் பகுதியில் தனியார் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் 5 பேர் கொண்ட கும்பல் மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து, திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மாமூல் கேட்டு மிரட்டி கொண்டிருந்த திருவள்ளூர் அடுத்த பாக்குபேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(20), காக்களூரை சேர்ந்த ஷியாம் ராபர்ட்(30), விஜயகுமார்(25), பெரியகுப்பத்தை சேர்ந்த ஆகாஷ்(21) மற்றும் திருத்தணி விக்னேஷ்(21) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், பூந்தமல்லியில் இருந்து கடப்பாவிற்கு சிமெண்ட் ஏற்றி திருவள்ளூர் வழியாக வந்த லாரியை மடக்கி கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட அப்புன்ராஜ் (எ) விமல்ராஜை‌ திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் கைது செய்தார்.

Related Stories: